வண்ணத்துப்பூச்சி

புழுவென பிறந்து
சிறகுகள் முளைத்து
வானில் பறக்கும் வாழ்க்கை
யாருக்கு கிடைக்கும் இதுபோல்...

நீ இல்லாத இடம் எங்கே?
காதலர்கள் உள்ளத்தில்!
கவிஞர்களின் எண்ணத்தில்!
அமைதியின் சின்னத்தில்!
ஓவியர் கை வண்ணத்தில்!

வண்ணங்கள் பல சுமந்து
பறக்கின்றாய் உன்னை மறந்து
எத்தனையோ வகைகள் உன்னிடத்தில்
மனம் சிறகுகள் விரிக்கிறது நொடி பொழுதில்

வாழக் கொடுத்த
வாழ்க்கையில்
வருத்தம் கொள்ளும்
 மனிதர்கள் மத்தியில்

கிடைத்த வாழ்க்கையில்
வான் உயரும்
நீயே தன்னம்பிக்கை சாட்சி.
Previous
Next Post »