விழிகளில் விஷம் பரப்பு

ஆசைகள்
அடங்க மறுத்தால்
கண்ணீரை காணிக்கையாக்கு

உன் அருகிலேயே
துரோகிகள் முளைத்தால்
விழிகளில் விஷம் பரப்பு

எங்கோ பெய்யும்
மழையால்
உன் மனதுக்குள்
புயல் வீசும்

நீ நடக்கையில் பூமி
நான்காய்
பிளக்கும்

எதற்கும் துணிந்தால்
உன் வலக்கையில்
உலகம் வந்தமரும்...

Previous
Next Post »