தனிமையை தேடி ஓடுகிறாய்?

வானத்தில் இருக்கும் விண்மீனே
நீ சிறகு விரித்தால் ஆகாதா?

உம்மென்று போகும் வெண்மேகம்
சில்லென்று மழையை தூவாதா?

என் நெஞ்சோடு இருக்கும்
உன் காதல் அது
உன்னோடு போய் தான் சேராதா?

தூரத்தில் இருக்கும் நிலவு கூட
துணைக்கு என்னை அழைக்கிறதே!

என் கூடவே இருக்கும் நீ மட்டும்
ஏன் தனிமையை தேடி ஓடுகிறாய்?
Previous
Next Post »