ஓவியம் நீ

ஒரு தொடர்வண்டி பயணம்
தோல் உரசும் மழைக் காற்று
தொட்டு பேசும் மழைத்துளி

எங்கோ ஒரு மூலையில் நீ
எனக்கு மிக அருகே உன்
சுவாசக் காற்றின் வாசனை
பல மயில் கடந்து
என் நாசியில் சுவாசமாய்...

உன் நிலா வட்ட முகமும்
நிஜம் மறக்கச் செய்யும் கண்களும்
என் இதய வரைபடத்தில்
முதன்மை ஓவியங்களாய்
இன்று வரை அப்படியே!
Previous
Next Post »