கவிதை பேசும் கருவிழி!

உன் கரு விழி
பார்த்தாலே நான்
கனவுல மிதப்பேனே!

உயிர் வழி
அவ புகுந்து என்
குருதியில் கலந்தாலே!

நீ சிரிச்சா தங்கக் காசு
உன் அழகுக்கு
என் சிந்தனை எல்லாம்
கால் தூசு

மழை போல
அவள் சிரித்தால்
மனதோடும் மார்கழி தான்!

உன் கைகோர்த்து
நடந்தாலே
பாதை எங்கும்
பனித்துளி தான்!

உன் கைக்குட்டை
அது போல உடன் இருப்பேன்
எப்போதும்!

Previous
Next Post »