நூல் அறுந்த பட்டமென மழை





அடித்து ஓய்ந்த மழையில்
மனிதம் முளைத்திருக்கிறது
அதனை காளானாய்
கிள்ளி எறிய எண்ணிய
கைகள் இங்கு ஏராளம்.
இணையம் இருப்பது
இம்சைக்கு அல்ல
அதுவே இளைஞர்களின்
ஆயுதம் ஆனது
ஆறுகள் ஆன சாலையில்
மனம் ஆனது நம்பிக்கை படகுகள்
கோடி கோடியாய்
கொட்டிய பணத்தில்
ஒட்டியது என்னவோ
அதிகார ஸ்டிக்கர்
கலாம் விட்டுச் சென்ற
விண்மீன்கள்
சாலையில் மின்னின
அழிக்க நினைத்த ஆகாயமும்
அடிமை ஆனது இவர்களிடத்தில்
அடியோடு வீழ்ந்தவன்
எழுந்தான் கம்பீரமாக
மழையோ நூல் அறுந்த
பட்டமென மறைந்து போனது....
Previous
Next Post »