ஆசை

போதும் என்னும்
மனம் இன்னும்
வேண்டும் என
ஆசைப்படுகிறேன்...
தோல்வி வந்தாலும்
மகிழ்ச்சியே - என்னை
அடைய வெற்றிக்கு
கொடுத்து வைக்கவில்லை...
தவறு செய்பவர்
மீது கோபம்
கொள்ளும் நமக்கு
நாம் செய்தால்
மன்னிப்பு கேட்க
மனம் வருவதில்லை...
குழந்தைகளைப் போல்
சிரித்துக் கொண்டே
இருக்க ஆசை தான்
எனக்கும்
இந்த வயதில்
சிரித்தால் அதற்கு
வேறு பெயர்
வைத்து விடுவார்களே...
Previous
Next Post »