தாய் என்னும் எரிமலை!

ஆயிரம் எரிமலைகள்
எரிந்து கொண்டிருக்கிறது
தாயின் மனதில்!

கணவன் தன்னை
பிரிந்து விடக் கூடாது
என்றும்!

மகன் தன்னை
மறந்து விடக் கூடாது
என்றும்!

அந்த எரிமலை
இன்றுவரை
வெடிப்பதில்லை...

அது வெடித்தால்
பிறகு மகன் என்ன
கணவன் என்ன...!

சாம்பல் மட்டுமே மிஞ்சும்!
Previous
Next Post »