ஆலமரமாய் நீ இரு

பேர் இருக்கும் புகழ் இருக்கும்
உடல் இருக்காது மனிதா உயிர் இருக்காது
வாழ்க்கை என்னும் புத்தகத்தில்
கடைசிப் பக்கம் விடுகதை தான் 
விடை கிடையாது
மரணம் விடையும் ஆகாது
பிறந்தவுடன் இறந்து விட்டால்
பெருந்தவம் தானோ
வாழ்க்கை அதை வாழ்வது என்பது
பாவம் என்பேனோ
சிறு விதையில் விருட்சமாகும்
ஆலமரமாய் நீ இரு
ஆண்டுக்கணக்காய் தள்ளாடும்
சிறு புல்லாய் நீயும் இராதே
காலம் காலமாய் உன் பெயர்
கலாமை போல நிலைத்திருக்க
உன் நெஞ்சில் வேண்டும்
அவர் கொடுத்த நம்பிக்கை தீப்பொறி...
Previous
Next Post »